மௌனம்...

மௌனத்தின் விளிம்பில்
தொக்கி நிற்கிறது
வீரியமுள்ள ஒரு வார்த்தை
உரசுவதற்குக் காத்திருக்கும்
தீக்குச்சியைப் போல...

உறவு...

அறுந்துபோன பட்டத்திற்கும்
அழுகின்ற சிறுவனுக்குமிடையில்
தவிக்கிறது காற்று

நீயும் என் புலன்களும்...

மறக்க நினைக்கும் போதெல்லாம்
மறக்காமல் வருகின்றன...
உன் ஞாபகங்கள்...

நினைக்க மறந்தாலும்
மறக்க மறுக்கின்றன
ஆழ்மன உணர்வுகள்

அவ்வப்போது தலைகாட்டிப் போகும்
உன்னைப் பற்றிய நினைவுகள்

ஓய்வு நேரங்களிலும்
விழித்துக்கொள்கின்றன புலன்கள்
உன் நினைவுகளால்...

ஓய்வெடுப்பது சாத்தியமற்றதாகவே இருக்கிறது
புலன்கள் விழிப்பாய் இருக்கையில்

என்ன செய்ய
உன்னையும் புலன்களையும்?

மீண்டும்...

இன்னும் நம்பிக்கை இருக்கிறது...
இப்போது உதிர்ந்து விட்ட வெள்ளிப்பூ - மீண்டும்
இதே காம்பில் பூக்குமென்று!